Last Updated : 13 Nov, 2025 07:24 AM

 

Published : 13 Nov 2025 07:24 AM
Last Updated : 13 Nov 2025 07:24 AM

எல்ஐசி, ‘இந்து தமிழ் திசை’ சார்பில் குழந்தைகள் தின சிறப்புப் போட்டிகள்

சென்னை: ஆண்​டு​தோறும் முன்​னாள் பிரதமர் நேரு​வின் பிறந்த நாளான நவ. 14-ம் தேதி குழந்​தைகள் தின​மாகக் கொண்டாடப்படுகிறது. அந்த தினத்​தையொட்டி லைஃப் இன்​ஷ்யூரன்ஸ் கார்ப்​பரேஷன் ஆஃப் இந்​தியா (எல்​ஐசி) வழங்​கும் `இந்து தமிழ் திசை - குழந்​தைகள் தின சிறப்​புப் போட்​டிகள்' நடை​பெற உள்​ளன. இந்​தப் போட்​டிகளை வேலம்​மாள் போதி கல்வி காம்​பஸும் இணைந்து நடத்​துகிறது.

பள்​ளிக் குழந்​தைகள் பங்​கேற்​கும் வகையி​லான இப்​போட்​டிகள் இரு பிரிவு​களாக நடை​பெறுகின்​றன. 1, 2, 3-ம் வகுப்​புப் படிக்​கும் குழந்​தைகள் ‘நான் நேரு​வா​னால்​..?’ எனும் தலைப்​பில் 40 முதல் 50 விநாடிகள் வரை பேசி, அந்த வீடியோவை 9384886990 என்ற வாட்​ஸ்​-அப் எண்​ணுக்கு அனுப்ப வேண்​டும்.

இவற்​றில் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட வீடியோக்​கள் ‘இந்து தமிழ் திசை’ வலை​தளப் பக்​கத்​தில் பதிவேற்​றம் செய்​யப்​படும். 4 மற்​றும் 5-ம் வகுப்பு பயிலும் குழந்​தைகள் ‘நேரு​வும் குழந்​தைகளும்…’ எனும் தலைப்​பில் 100 முதல் 150 வார்த்​தைகளுக்​குள் கட்​டுரை​யாக எழு​தி, அதை ஸ்கேன் செய்து mariyappan.m@hindutamil.co.in என்ற மின்​னஞ்​சல் முகவரிக்கு அனுப்​பிவைக்க வேண்​டும். சிறப்​பான கட்​டுரைகள் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளி​யிடப்​படும்.

இந்​தப் போட்​டிகளுக்கு வீடியோ மற்​றும் கட்​டுரைகளை வரும் 20-ம் தேதிக்​குள் அனுப்ப வேண்​டும். சிறப்​பான வீடியோ மற்​றும் கட்​டுரைகளுக்கு பா​ராட்​டுச் சான்​றிதழும்​, பரிசுகளும்​ வழங்​கப்​படும்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x