Published : 30 Oct 2025 06:43 AM
Last Updated : 30 Oct 2025 06:43 AM

பழைய தவறுகளை சரி செய்தால் எதிர்காலத்தில் வெற்றி நிச்சயம்: மாணவர்களுக்கு தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அறிவுரை

தாம்பரம் அருகே சேலையூரில் உள்ள பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ‘ஈவா ஸ்டாலின் ஐஏஎஸ் அகாடமி’ சார்பில் நடைபெற்ற ‘இந்து தமிழ் திசை - வெற்றிப்பாதை’ நிகழ்வில் பங்கேற்றோரில் ஒரு பகுதியினர். படங்கள்: எம்.முத்துகணேஷ்

தாம்பரம்: பழைய தவறுகளை சரி செய்தால் எதிர்காலத்தில் வெற்றி நிச்சயம் என்று தாம்பரம் மாநகராட்சி ஆணையர் சீ.பாலச்சந்தர் கூறினார். அரசுப் போட்​டித் தேர்​வு​களுக்​குத் தயா​ராகும் மாணவர்​களுக்கு வழி​காட்​டும் நோக்​கில் `ஈவா ஸ்டா​லின் ஐஏஎஸ் அகாட​மி' சார்​பில் 'இந்து தமிழ் திசை - வெற்​றிப்​பாதை' என்ற நிகழ்வு தாம்​பரம் அருகே சேலை​யூரில் உள்ள பாரத் உயர்​கல்வி மற்​றும் ஆராய்ச்சி நிறு​வனத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இந்த நிகழ்ச்​சி​யில் சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்ற தாம்​பரம் மாநக​ராட்சி ஆணை​யர் சீ.​பாலச்​சந்​தர் பேசி​ய​தாவது: மாணவர்​கள் கல்​லூரிப் பரு​வத்தை சிறப்​பாகப் பயன்​படுத்​திக்​கொள்ள வேண்​டும். சிறப்​பான எதிர்​காலம் காத்​துக் கொண்​டிருக்​கிறது என்​பதை மறந்​து​விடக் கூடாது. ஒவ்​வொரு​வர் வாழ்க்​கை​யிலும் கனவு இருக்க வேண்​டும். அந்த கனவைப் போராடி நனவாக்க வேண்​டும். நமது முயற்​சிகள் நல்​ல​தாக இருந்​தால் வெற்​றியோ, தோல்​வியோ எதிர்​காலத்​துக்கு பயனுள்​ள​தாக இருக்​கும்.

நம் எண்​ணங்​கள் தெளி​வாக​வும், நிதான​மாக​வும், தூய்​மை​யாக​வும் இருந்​தால் கனவு நிறைவேறும். நான் 6 முறை முயற்​சித்த பிறகே ஐஏஎஸ் தேர்​வில் வெற்றி பெற்​றேன். எனது கனவை நிறைவேற்ற வேண்​டும் என்​ப​தற்​காக, தொடர்ந்து முயற்​சித்து வெற்றி பெற்​றேன்.

சீ.பாலச்சந்தர், டி.ஸ்டாலின், ஆர்.ஹரிபிரகாஷ்

நீங்​கள் மற்​றவர்​களு​டன் உங்​களை ஒப்​பிட்​டுக் கொள்​ளாதீர்​கள், தாழ்வு மனப்​பான்​மையை வளர்த்​துக் கொள்​ளாதீர்​கள். நீங்​கள் இதற்கு முன் செய்த தவறுகளை சரி செய்​தால், எதிர்​காலத்​தில் வெற்றி நிச்​ச​யம். தேர்வு மதிப்​பெண் குறைந்​ததற்​கான காரணத்தை கண்​டு​பிடித்​தால், அடுத்த முறை வெற்றி பெறலாம்.

வேலை மட்​டும்​தான் வாழ்க்கை என்று முடிவு செய்​து​வி​டாதீர்​கள். அது வாழ்க்​கை​யின் ஒரு பகு​தி​தான். அதைத் தாண்டி ஏராள​மான விஷ​யங்​கள் உள்​ளன. உடல் நலத்தை ஆரோக்​கி​யத்​துடன் வைத்​துக்​கொள்ள வேண்​டும். நல்ல நண்​பர்​கள் வேண்​டும். நல்ல எண்​ணங்​கள் அவசி​யம். வாழ்க்​கை​யில் முக்​கிய​மான இவற்றை மாணவர்​கள் கவனத்​தில் கொள்ள வேண்​டும். அதிக நேரம் செல்​போன் பயன்​படுத்​து​வதை தவிர்க்க வேண்​டும். செல்​போ​னால் நமது நேரம் வீணடிக்​கப்​படு​கிறது. இதனால், கவனிக்​கும் திறன் குறை​கிறது.

வாழ்க்​கை​யில் தேடல் முக்​கி​யம், தேடித்​தேடி படிக்க வேண்​டும். வாசிக்​கும் பழக்​கத்தை அதி​கரித்​துக் கொள்ள வேண்​டும். ஒரு நாளைக்கு குறைந்​த​பட்​சம் 10 பக்​க​மாவது படிக்க வேண்​டும். நல்ல எண்​ணங்​கள் வெற்​றிப் பாதைக்கு அழைத்​துச் செல்​லும். நல்ல நண்​பர்​கள் நமக்கு பலமாக இருப்​பார்​கள். இவ்​வாறு அவர் பேசினர். தொடர்ந்​து, மாணவ, மாணவி​களின் பல்​வேறு கேள்வி​களுக்கு ஆணை​யர் பதில் அளித்​தார்.

ஈவா ஸ்டா​லின் ஐஏஎஸ் அகாடமி இயக்​குநர் பேராசிரியர் டி.ஸ்​டா​லின் பேசி​ய​தாவது: நீங்​கள் முதலில் உங்​களை நம்ப வேண்​டும். சாதிக்​கப் பிறந்​தவர்​கள் என்ற எண்​ண​மும், உணர்​வும் நமக்​குள் வர வேண்​டும். தோல்விக்கு குடும்​பப் பின்​னணி​யைக் காரணம் காட்​டக்​கூடாது.

பலர் பின்​தங்​கிய குடும்​பப் பின்​னணி​யில் இருந்​தும் உயர்ந்தநிலைக்கு வந்​துள்​ளனர். இதற்கு பல உதா​ரணங்​கள் உள்​ளன. அப்​துல் கலாம் ஏழ்​மை​யான குடும்​பத்​தில் பிறந்​தவர். பிற்​காலத்​தில் பெரிய விஞ்​ஞானி​யாக​வும், நாட்​டின் முதல் குடிமக​னாக​வும் உயர்ந்​தார். எனவே, குடும்ப சூழ்​நிலை நமது வெற்​றிக்கு தடை​யாக இருக்​கக் கூடாது.

கிரிக்​கெட் வீரர் தோனி, அம்​பானி, எலான்​மஸ்க் உள்​ளிட்​டோர் சிரம​மான பின்​னணி​யில் இருந்து உலகின் முன்​னணி நிலைக்கு வந்​துள்​ளனர். முயற்​சி​தான் எல்​லா​வற்​றுக்​கும் முக்​கியக் காரணம். எனவே, தொடர்ந்து முயற்​சிக்க வேண்​டும். பிரச்​சினை​களைக் கண்டு பயப்​படக் கூடாது.

அவற்றை எதிர்​கொள்ள வேண்​டும். எந்​தக் காரி​யத்தை செய்​தா​லும் உண்​மை​யாக, உறு​தி​யாக இருக்க வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார். பாரத் உயர்​கல்வி மற்​றும் ஆராய்ச்சி நிறுவன கூடு​தல் பதி​வாளர் முனை​வர் ஆர்​.ஹரிபிர​காஷ் பேசும்​போது, “படிப்​பது மட்​டும் முக்​கியமல்ல, நாட்​டுக்கு சேவை செய்ய வேண்​டும் என்ற எண்​ணம் அவசி​யம்.

உங்​கள் முயற்​சி​யால், உழைப்​பால் இந்​தியா உயர வேண்​டும். மாணவர்​கள் நிறைய படிக்க வேண்​டும். உலகில் போட்​டிகள் இல்​லாமல் எது​வும் இல்​லை. எனவே, சவால்​களை சமாளித்​து, விடா​முயற்​சி, தன்​னம்​பிக்​கை​யுடன் வாழ்க்​கை​யில் உயர வேண்​டும். தற்​போது உயர்ந்த நிலை​யில் இருப்​பவர்​களும் பல்வேறு தடங்கல்​கள், இன்​னல்களைக் கடந்து வந்​தவர்​கள்​தான் என்​பதை புரிந்​து​கொள்ள வேண்​டும். தொழில்​நுட்ப வளர்ச்சியை மாணவர்​கள் நல்ல நோக்​கத்​துக்​காகப் பயன்​படுத்​திக் கொள்ள வேண்​டும். இவ்​வாறு அவர் பேசினர்.

நிகழ்ச்​சி​யில், பாரத் கல்​லூரி மின்​னியல் மற்​றும் மின்​னணு​வியல் துறைத் தலை​வர் முனை​வர் எஸ்​.பிர​காஷ், எலெக்ட்​ரானிக்​ஸ் அண்டு கம்​யூனிகேஷன் இன்​ஜினீயரிங் துறைத் தலை​வர் முனை​வர் கலைச்​செல்வி மற்​றும் பேராசிரியர்​கள், மாணவ, மாணவி​கள் கலந்​து​கொண்​டனர்​ `இந்​து தமிழ்​ திசை' நாளிதழ்​ முது​நிலை உதவி ஆசிரியர்​ மு.​முரு​கேஷ் ஒருங்​கிணைத்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x