Published : 23 Sep 2025 06:40 AM
Last Updated : 23 Sep 2025 06:40 AM

வண்​டலூரில் நாளை ‘இந்து தமிழ் திசை - வாசிப்பை நேசிப்​போம்’ நிகழ்வு!

சென்னை: இளைய தலை​முறை மாணவர்​களிடம் கல்​வி​யின் முக்​கி​யத்​து​வத்​தை​யும், புத்தக வாசிப்​பின் அவசி​யத்​தை​யும் வலி​யுறுத்​தும் வகை​ எஸ்​எஸ்​எல்​எஃப் கல்வி அறக்​கட்​டளை வழங்​கும் ‘இந்து தமிழ் திசை’ - வாசிப்பை நேசிப்​போம் எனும் நிகழ்வு சென்னை வண்​டலூரில் உள்ள பி.எஸ்​.அப்​துர் ரஹ்​மான் கிரசன்ட் அறி​வியல், தொழில்​நுட்​பக் கல்​லூரி அரங்​கில் நாளை (செப்​.24, புதன்​கிழமை) காலை 11 மணிக்கு நடை​பெற உள்​ளது.

தனி மனிதனின் வளர்ச்​சிக்​கு புத்தக வாசிப்பு மிக​வும் அவசி​ய​மானது. நவீன அறி​வியல், தொழில்​நுட்ப வளர்ச்​சி​யின் காரண​மாக இன்​றைய தலை​முறை மாணவர்​கள் புத்தக வாசிப்​பில் பெரிதும் ஆர்​வ​மின்றி இருக்​கின்​றனர். புத்தக வாசிப்​பின் வழி​யாகத்​தான் புதிய உலகை காண​முடி​யும், புதிய சிந்​தனை​கள் பிறக்​கும்.

மாணவர்களிடம் புத்தக வாசிப்பு.. புத்தக வாசிப்பு பழக்​கத்தை மாணவர்​களிடம் கொண்டு செல்​லும் முயற்​சி​யாக முன்​னெடுக்​கப்​படும் இந்த நிகழ்​வில், மத்​திய அரசின் பாது​காப்பு கணக்கு கட்​டுப்​பாட்​டாளர் டி.ஜெயசீலன் ஐடிஏஎஸ், எஸ்​எஸ்​எல்​எஃப் கல்வி அறக்​கட்​டளை நிறு​வனர் டாக்​டர் ஜி.சக்​திவேல், கல்​வி​யாள​ரும் எழுத்​தாள​ரு​மான பேராசிரியர் ஏ.முகமது அப்​துல்​காதர் ஆகியோர் பங்​கேற்​று, கருத்​துரை​யாற்ற உள்​ளனர். புத்தக வாசிப்​பின் அவசி​யத்தை அறிந்​து​கொள்ள விரும்​பும் அனை​வரும் இந்த நிகழ்​வில் பங்​கேற்று பயன்​பெறலாம்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x