Published : 15 Aug 2025 08:19 AM
Last Updated : 15 Aug 2025 08:19 AM

ஆர்​எம்கே குழு​மம் - சங்​கர் ஐஏஎஸ் அகாடமி - ‘தி இந்​து’ இணைந்து ‘அர​சாங்க அதி​காரி​யாக உரு​வாகுங்​கள்’ வழி​காட்​டு​தல் அமர்வு

ஆர்​எம்கே பொறி​யியல் கல்​லூரி​யில் நடை​பெற்ற வழி​காட்​டு​தல் அமர்​வில் திரு​வள்​ளூர் ஆட்​சி​யர் எம்​.பிர​தாப் உரை​யாற்​றி​னார். உடன் தமிழக காவல் துறை முன்​னாள் இயக்​குநர் எஸ்​.ஆர்​.ஜாங்​கிட், ஆர்​எம்கே கல்வி நிறு​வனங்​களின் நிறு​வனர் மற்​றும் தலை​வர் ஆர்​.எஸ்​.​முனிரத்​தினம் உள்​ளிட்​டோர்​.

சென்னை: இந்​திய அரசுப் பணி தேர்​வு​களில் மாணவர்​கள் ஆர்​வ​முடன் பங்​கேற்​பதை ஊக்​குவிக்​கும் வகை​யில், சங்​கர் ஐஏஎஸ் அகாட​மி, ‘தி இந்​து’குழு​மத்​துடன் ஆர்​எம்கே கல்விக் குழு​மம் இணைந்து ‘அர​சாங்க அதி​காரி​யாக உரு​வாகுங்​கள்’ என்ற தலைப்​பில் நேற்று ஒரு வழி​காட்​டு​தல் அமர்வை நடத்​தி​யது.

ஆர்​எம்கே பொறி​யியல் கல்​லூரி முதல்​வர் கே.ஏ.​முகமது ஜுனைத் வரவேற்​புரை நிகழ்த்​தி​னார். ஆர்​எம்டி பொறி​யியல் கல்​லூரி முதல்​வர் என்​.அன்​புச்​செழியன் முக்​கிய விருந்​தினர்​களை அறி​முகப்​படுத்​தி​னார்.

நிகழ்ச்​சி​யில் ‘தி இந்து’ மூத்த பிராந்​திய மேலா​ளர் மற்​றும் கிளஸ்​டர் தலை​வர் பாபு விஜய் பேசும்​போது, யுபிஎஸ்சி தேர்​வுக்கு நாளிதழ்களை படிப்​ப​தன் முக்​கி​யத்​து​வம் குறித்து எடுத்​துரைத்​தார். தற்​போதைய நிகழ்​வு​கள், அரசி​யல் வளர்ச்​சிகள், ஆழமான கட்​டுரைகள் ஆகியவை ​தேர்​வர்​களுக்கு அவசி​ய​ம் என்றார்.

ஆர்​எம்கே கல்விக் குழும துணைத் தலை​வர் ஆர்​.எம்​.கிஷோர், அரசுப் பணி​யாளர் ஆகும் மாணவர்​களுக்கு உழைப்​பு, நேர்மை, அர்ப்​பணிப்பு முக்​கி​யம் எனக் கூறி​னார். தமிழக காவல் துறை முன்​னாள் இயக்​குநர் எஸ்​.ஆர்​.ஜாங்​கிட் பேசும்​போது, அரசுப் பணியாள​ராக வெற்றி பெறு​வது எப்​படி என்​ப​தை​யும், இதற்கு கண்​ணோட்​டம், நம்​பிக்​கை, கடின உழைப்​பு, ஒழுங்​கு, நிலைத்​தன்மை, திட்​ட​மிடல், நேர மேலாண்​மை, நோக்​க​ முள்ள வெற்றி ஆகிய 8 முக்கிய அம்​சங்​கள் தேவை என்​றார்.

திரு​வள்​ளூர் ஆட்​சி​யர் எம்​.பிர​தாப் பேசும்​போது, பொறி​யியல் படிப்பை முடித்​து​விட்டு ஆட்​சி​யர் ஆகும் வரையிலான தனது பயண அனுபவத்தை பகிர்ந்​தார். யுபிஎஸ்சி தேர்​வுக்கு நாளிதழ் படிக்​கும் பழக்​கத்தை ஏற்​படுத்​திக் ​கொள்ள வலி​யுறுத்​தி​னார். ஆர்​எம்கே கல்வி நிறு​வனங்​களின் நிறு​வனர் மற்​றும் தலை​வர் ஆர்​.எஸ்​.​முனிரத்​தினம் தலைமை உரை நிகழ்த்​தி, அனைத்து மாணவர்​களும் யுபிஎஸ்சி தேர்​வுக்​குத்தயா​ராக உற்​சாகமளித்​தார். ஆர்​எம்கே பொறி​யியல், தொழில்​நுட்ப கல்​லூரி முதல்​வர் என்​. சுரேஷ்கு​மார் நன்றி கூறி​னார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x