Published : 29 Jul 2025 06:36 AM
Last Updated : 29 Jul 2025 06:36 AM

சிங்கப்பூரின் 60-வது தேசிய தினத்தை முன்னிட்டு சென்னையில் ஆக.1 முதல் 10-ம் தேதி வரை ‘சிங்கா 60’ விழா!

சென்னை: தென்கிழக்கு ஆசியாவின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர் பல்வேறு துறைகளில் முன்மாதிரி நாடாக விளங்குகிறது. சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு மிகவும் ஆழமானது. குறிப்பாக சிங்கப்பூர், தமிழ்நாடு இடையிலான உறவு தனித்துவம் மிக்கது. சிங்கப்பூரின் தேசிய மொழிகளில் ஒன்றாக தமிழ் அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது. ராஜ்ஜிய மற்றும் பொருளாதார ரீதியாக இந்தியா, சிங்கப்பூர் இடையிலான உறவு வலுவடைந்து வருகிறது.

விரைவில் சிங்கப்பூரின் 60-வது தேசிய தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னையில் ‘சிங்கா 60’ என்ற விழா நடத்தப்படுகிறது. ஆகஸ்ட் 1 முதல் 10-ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் கலாச்சார, பொருளாதாரம் சார்ந்த நிகழ்ச்சிகள் இடம்பெறும். ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்து குழுமம்’ மற்றும் ‘தி இந்து பிசினஸ்லைன்’ இணைந்து இந்த விழாவை நடத்துகின்றன.

ஆகஸ்ட் 1-ம் தேதி ‘நகரத்தின் சிந்தனைகள்’ என்ற பெயரில் சிறப்பு கண்காட்சி நடைபெறும். இதில் சிங்கப்பூர், இந்தியாவைச் சேர்ந்த ஓவியர்கள், சிற்பிகளின் படைப்புகள் இடம்பெறும். குறிப்பாக குமரி நாகப்பன், கவிதா பத்ரா, பி.ஞானா, மகாலட்சுமி கண்ணப்பன், ஆர்யன் அரோரா உட்பட பலரின் படைப்புகள் இந்தக் கண்காட்சியில் இடம்பெறவுள்ளன ஆக.1-ம் தேதி தொடங்கும் இக்கண்காட்சி ஆக. 30-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும்.

மேலும் ஆக.2-ம் தேதி ‘முச்​சந்​தி' என்ற தலைப்​பில் நாடகம் அரங்​கேற்​றப்​பட​வுள்​ளது. சிங்​கப்​பூரைச் சேர்ந்த அகம் தியேட்​டர் லேப் இந்த நாடகத்தை அரங்​கேற்ற உள்​ளது.

ஆக.4, 5 ஆகிய தேதி​களில் ‘ஸ்​கிரீன் சிட்​டி’ என்ற சிறப்பு நிகழ்ச்சி நடை​பெறுகிறது. இதில், இந்​தி​யத் திரைப்​படங்​களில் சிங்​கப்​பூர் எவ்​வாறு சித்​தரிக்​கப்​பட்டு வரு​கிறது என்​பது குறித்து சுவாரசி​ய​மாக விவரிக்​கப்​படும்.

ஆக.7-ம் தேதி ‘இண்​டியா கனெக்ட்- சிங்​கப்​பூர் எடிஷன்’ என்ற தலைப்​பில் சிறப்பு விவாத நிகழ்ச்சி நடை​பெறும். இதில் இரு நாடு​கள் இடையி​லான ராஜ்ஜிய, பொருளா​தார, தொழில்​நுட்ப உறவு​கள் குறித்து விரி​வாக விவா​திக்​கப்​படும். ஆசிய ஆராய்ச்​சிக் கழகத்​தைச் சேர்ந்த கிஷோர் மது​பானி, மத்​திய அரசின் தலைமை பொருளா​தார ஆலோ​சகர் அனந்த நாகேஸ்​வரன், மத்​திய மின்​னணு மற்​றும் தகவல் தொழில்​நுட்​பத் துறை செய​லா​ளர் கிருஷ்ணன், சிங்​கப்​பூர், பிரான்ஸ் நாடு​களுக்​கான முன்​னாள் இந்​திய தூதர் ஜாவத் அஷ்ரப் உள்​ளிட்​டோர் விவாதத்​தில் பங்​கேற்க உள்​ளனர்.

ஆக.9-ம் தேதி ‘சக்​தி​தாசன்’ என்ற தலைப்​பில் மகாகவி பார​தி​யாரின் சிறப்பு ஆவண படம் திரை​யிடப்படும். இந்த ஆவண படத்தை சௌந்​தர்யா சுகு​மார் தயாரித்​துள்​ளார். அன்​றைய தினம் ‘கேபெல்​லா’ என்ற இந்​திய, சிங்​கப்​பூர் பாணி இசைக் கச்​சேரி நடை​பெறும். ஆக.1 முதல் 10-ம் தேதி வரை சென்னை மெட்ரோ ரயில் நிலை​யங்​களில் ‘காலம்​கால​மாக சிங்​கப்​பூர்’ (Singapore through the ages) என்ற தலைப்​பில் இந்து குழு​மத்​தின் ஆவணக் ​காப்​பகத்​தின் தொகுப்பு அடங்​கிய சிறப்புக் கண்​காட்சி நடை​பெறும்.

சிங்​கப்​பூர் அரசி​யல், கலாச்​சா​ரம், கலை, சமையல், அந்த நாட்​டின் வங்​கித்துறை​யில் தமிழக நாட்​டுக்​கோட்டை செட்​டி​யார் சமூகத்​தின் பங்​களிப்பு ஆகிய​வற்​றின் அடிப்​படையி​லான ஆவணங்​கள் கண்​காட்​சி​யில் இடம்​பெறும். ஆகஸ்ட் 6-ல் அரவிந்த் குமார​சாமி, ஆகஸ்ட் 8-ல் சிற்பி குமரி நாகப்​பன் ஆகியோர் சிறப்​புரை​ யாற்​று​வார்​கள்.

‘சிங்​கப்​பூரின் சுவை' என்ற பெயரில் சிங்​கப்​பூர் சமையல் கலைஞர் சௌமியா வெங்​கடேசனின் பிரம்​மாண்ட உணவுத் திரு​விழா, சென்னை ரெசிடென்சி டவர்ஸ் ஹோட்​டலில் நடை​பெறுகிறது. இதில் சோ யூ, மிஸ்​டர் ஓங், நாசி அண்ட் மீ ஆகிய பிரபல ஹோட்​டல்​களும் பங்​கேற்​கின்​றன.

நிகழ்ச்​சிக்​கான பங்​கு​தா​ரர்​களாக சிங்​கப்​பூர் தூதரகம், டிபிஎஸ் வங்​கி​யும் துணை பங்​கு​தா​ரர்​களாக டிவிஎஸ், லார்​சன் அண்ட் டூப்​ரோ, ஓலம் அக்​ரி, டிரான்​ஸ்​வோர்ல்​டு, நிப்​பான் பெயின்ட் அண்ட் எச்​ஒய்​சி, ராம்​ராஜ் காட்​டன், லலிதா ஜுவல்​லரி, ரெசிடென்சி டவர்​ஸ், போரம் ஆர்ட் கேலரி, மிஸ்​டர் ஓங், நாசி அண்ட் மீ, பம்​கின்​ டேல்​ஸ், மேவெண்​டோயர்​, சிங்​கப்​பூர்​ தமிழ்​ முரசு நாளிதழ்​ ஆகியவை உள்​ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x