Published : 21 Jul 2025 08:50 AM
Last Updated : 21 Jul 2025 08:50 AM

‘இந்து தமிழ் திசை’ - மிரே அசெட் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து வழங்கும் ‘எம்எஃப் மந்த்ரா’ எனும் ‘முதலீடும் முன்னேற்றமும்’ - ஜூலை 26 அன்று சென்னையில் நடைபெறுகிறது

சென்னை: `இந்து தமிழ் திசை' நாளிதழ் பல்​வேறு துறை​களி​லும் ஆர்​வத்​துடன் இருப்​பவர்​களுக்கு வழி​காட்​டும் வகை​யில் சிறப்புமிக்க பல நிகழ்​வு​களை கள அளவில் தொடர்ந்து நடத்தி வரு​கிறது. அந்த வகை​யில் மிரே அசெட் மியூச்​சுவல் ஃபண்ட் நிறுவனத்துடன் இணைந்து ‘எம்​எஃப் மந்த்​ரா’ எனும் ‘முதலீடும் முன்​னேற்​ற​மும்’ என்​கிற சிறப்பு நிகழ்வை சென்​னை​யில் நடத்துகிறது.

இந்த சிறப்பு நிகழ்வு வரும் ஜூலை 26 (சனிக்​கிழமை) அன்று சென்னை மயி​லாப்​பூர் ராதாகிருஷ்ணன் சாலை​யிலுள்ள சவேரா ஓட்​டல் அரங்​கில் மாலை 4 மணிக்கு ‘மியூச்​சுவல் ஃபண்ட்: குறிக்​கோளு​டன் கூடிய முதலீடு’ எனும் தலைப்​பின்​கீழ் நடை​பெறவுள்​ளது.

Gopinath S

அப்​போது, பரஸ்பர நிதி​யில் முதலீடு செய்​வது குறித்​தும், அவ்​வாறு முதலீடு செய்​வதன் மூல​மாக அதிக லாபத்தை ஈட்​டும் வழி​முறை​கள் குறித்​தும் ஆலோ​சனை​களும் வழிகாட்டுதல்​களும் வழங்​கப்​பட​வுள்​ளன.

பா.பத்மநாபன்

இந்த நிகழ்​வில் சிறப்பு விருந்​தினர்​களாக தமிழகத்​தின் புகழ்​பெற்ற பொருளா​தார நிபுணரும், சான்​றிதழ் பெற்ற நிதித்​திட்ட ஆய்வாள​ரு​மான பா.பத்​ம​நாபன், சென்னை மிரே அசெட் இன்​வெஸ்ட்​மென்ட் மேனேஜர்ஸ் இந்​தியா (பி) நிறு​வனத்​தின் சீனியர் மேனேஜர் எஸ்​.கோபி​நாத் ஆகியோர் பங்​கேற்று ஆலோ​சனை​களை​யும் வழி​காட்​டு​தல்​களை​யும் வழங்​க​வுள்​ளனர்.

இந்த நிகழ்​வில் பரஸ்பர நிதி​யில் முதலீடு செய்ய ஆர்​வ​முள்ள அனைத்து வயதினரும் பங்​கேற்று பயன்​பெறலாம். மாலை 4 மணிக்கு தேநீர் விருந்​தோடு தொடங்​கும் இந்​நிகழ்​வுக்​கான அனு​ம​தி இலவசம்​. இந்த சிறப்பு நிகழ்வில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் https://www.htamil.org/MFMANTRACHE என்ற லிங்கில் பதிவு செய்து கொள்ளலாம் கூடுதல் விவரங்களைப் பெற 9944029700 என்ற எண்ணில் அழைக்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x