Published : 28 May 2025 04:38 PM
Last Updated : 28 May 2025 04:38 PM
சென்னை: ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் ஆச்சார்யா பஞ்சகச்சம் வேஷ்டியின் விளம்பரத் தூதராக கலாச்சார வல்லுநரான துஷ்யந்த் ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அந்நிறுவனம் பகிர்ந்த தகவல்: பாரம்பரியத்தையும் தொலைநோக்கு சிந்தனையையும் ஒருங்கிணைக்கும் இத்தருணத்தில், ராம்ராஜ் காட்டன் நிறுவனம், ஒரு முக்கியமான முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. அந்நிறுவனம், புகழ்பெற்ற அறிஞரும் கலாச்சார வல்லுநருமான துஷ்யந்த் ஸ்ரீதருடன் இணைந்து தனது ஆச்சார்யா பஞ்சகச்சம் வேஷ்டியை பிரபலப்படுத்தவிருக்கிறது. ஆச்சார்யா பஞ்சகச்சம் வேஷ்டி, ஆன்மிகப் பாரம்பரியம் மற்றும் இந்திய கலாச்சார அடையாளம் ஆகியவற்றின் கலவையாகும்.
இது ஒரு வழக்கமான கூட்டிணைவு அல்ல. சனாதன தர்மம், கலாச்சாரப் பாரம்பரியம் மற்றும் காலம் கடந்த உன்னதமான உடை ஆகியவற்றின் மீது பரஸ்பர ஈர்ப்பு இரு சக்திகளின் சங்கமம் ஆகும். வேட்டியின் கண்ணியத்தை வெகுகாலமாகப் பறைசாற்றிவரும் ராம்ராஜ் காட்டன் துஷ்யந்த் ஸ்ரீதரை வெறும் செய்தித் தொடர்பாளராக மட்டும் பார்க்கவில்லை. மாறாக, இந்நிறுவனம் பின்பற்றும் விழுமியங்களை சுவாசித்து வாழும் ஒரு மனிதரை அங்கீகரித்துப் போற்ற விரும்புகிறது.
ஆச்சார்யா பஞ்சகச்சம் வேஷ்டி, நமது ஆன்மிக மரபுகளுக்கு மரியாதை செலுத்துவதுடன் ஞானம், தர்மம் ஆகியவற்றின் பாதையில் நடக்க விரும்புவோருக்கான ஆடையாக உருவெடுக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது. நுணுக்கமும் பரிசுத்தமும் இணைந்த இந்த வேஷ்டி, வெறுமனே ஒரு ஆடை மட்டுமல்ல மாறாக, காலம் கடந்து நிலைத்து நிற்கும் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் அம்சமும்தான்.
சனாதன தர்மம் குறித்த ஆழ்ந்த ஞானமும் திறமையும் கொண்ட துஷ்யந்த் ஸ்ரீதர், நமது பண்டைய ஞானத்தை சமகாலத்துக்கு ஏற்றபடி வடித்துத் தரும் வல்லமை படைத்தவர். இந்திய இதிகாசங்களையும் வேத நூல்களையும் எல்லா தலைமுறை பார்வையாளர்களையும் சென்றடையும் வகையில் திறம்பட எடுத்துரைத்து, நமது கலாச்சாரத்தைக் காக்கும் குரலாகவே திகழ்கிறார். அவரது ஈடுபாடு என்பது தற்செயலானதல்ல. இந்திய தேசத்தின் புனிதமான பாரம்பரியங்களைக் கொண்டாடுவதுடன் அவற்றை இன்றைய சூழ்நிலைகளுக்கு ஏற்ப விரித்துரைப்பது எனும் ராம்ராஜ் நிறுவனத்தின் எண்ண உறுதியை அவரும் கொண்டிருப்பதை இது நன்கு பிரதிபலிக்கிறது.
ஆச்சார்யா பஞ்சகச்சம் வேஷ்டி, இக்கோட்பாட்டின் வாழும் சாட்சியாகத் திகழ்கிறது. புனித நிகழ்வுகள், மதம் சார்ந்த நிகழ்வுகள், கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகள் ஆகியவற்றின்போது அணியத்தக்க வகையில் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் ஓர் அடையாளச் சின்னமாக இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. முக்கிய நிகழ்வுகளில் வெறும் சடங்குச் சின்னமாக அல்லாமல், ஓர் உன்னத தர்மத்தின் தொடர்ச்சியாக அணிய விரும்புவோருக்கான இந்த உடை, அவ்விடத்தையே புனிதமாக மாற்றிவிடுகிறது. இந்த வேஷ்டி, பாரம்பரியத்தை ஒலிக்கும் தன்மை உடைய துணி இது. மேலும் நம்பிக்கையும், அணிவோரின் பெருமையையும் பிரதிபலிக்கும் தன்மை கொண்டது.
இது தொடர்பான நிகழ்ச்சியில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் நிறுவனரும் கலாச்சாரத் தொழில்முனைவோருமான கே.ஆர். நாகராஜன் பேசியதாவது: “ராம்ராஜ் என்றாலே வேஷ்டிதான் நினைவுக்கு வரும். நாங்கள் 4000 வகையான வேஷ்டிகளைத் தயாரித்து நாடெங்கும் விற்பனை செய்து வருகிறோம். இவற்றுள், பஞ்சகச்சம் வேஷ்டி என்பது ஆச்சாரியர்களுக்கும் குருமார்களுக்கும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டதாகும். ஆந்திரப் பிரதேசம், தென்னிந்தியா தாண்டி உலகமெங்கும் இதனை எடுத்துச்செல்ல வேண்டும் என்று நாங்கள் எண்ணியபோது இயல்பாகவே எங்களின் தேர்வாக துஷ்யந்த் ஸ்ரீதர் அமைந்துவிட்டார்.
இந்திய கலாச்சாரத்தை உலகெங்கும் கொண்டுசென்று சேர்க்கும் அவரது அர்ப்பணிப்பு உணர்வின் காரணமாகவே அவர் பெருமைமிகு ஆச்சார்யா பஞ்சகச்சம் வேஷ்டியின் விளம்பரத் தூதராக ஆக்கிவிட்டது. இந்திய கலாச்சாரத்தையும் தர்மத்தையும் பாதுகாக்கும் அவரது பற்றுறுதியுடன் பண்டிய ஞானத்தையும் நவீன வாழ்க்கையையும் இணைக்கும் திறனும் இணைந்துள்ளது. இது உள்ளவாறே எங்களது பிராண்டுடன் முழுக்க ஒத்துப்போகின்ற விஷயமாகும்.
ஆச்சார்யா பஞ்சகச்சம் வேஷ்டி என்பது பாரம்பரிய உடை என்பதைத் தாண்டி, நமது பாரம்பரியத்தை புனிதமான பண்டிகை நாட்களின் மகிமையுடன் சேர்த்து நெய்ததாகும். ஒவ்வொரு இந்தியரையும் நான் கேட்டுக் கொள்வதெல்லாம் நமது வேர்களை மனதில் நிலைநிறுத்துவதோடு மட்டுமல்லாமல் அதனை உடையிலும் வெளிப்படுத்துங்கள் என்பதைத்தான்,” என்றார்.
துஷ்யந்த் ஸ்ரீதர் பேசும்போது, “சிவபெருமானிடம் பார்வதி தேவியார், ஆயிரம் பெயர்களில் உள்ள சாராம்சத்தைக் கேட்டார். அப்போது சிவபெருமான் ‘ராம’ என்ற ஒற்றைச் சொல்லையே விடையாகத் தந்தார். அந்த வகையில், ராம்ராஜ் நிறுவனமும் ‘ராம’ என்ற புனிதமான பெயரைத் தாங்கும் பேறு பெற்றிருக்கிறது. ஆண்டாண்டு காலமாக எத்தனையோ ஆச்சாரியார்கள் இந்த பூமியில் அவதரித்து உலவியிருக்கின்றனர். ஆதி சங்கரர், வேதாந்த தேசிகர், ராமானுஜர், மத்வர் முதல் அண்மையில் புனிதரான மஹாபெரியவா வரை எல்லோரும் நல்வழியில் நடந்து, அதனையும் நமக்குக் காட்டிச் சென்றிருக்கின்றனர்.
அதில் நடந்து சென்றிருக்கின்றனர். ஆச்சார்யா வேஷ்டிகள் வாயிலாக ராம்ராஜ் காட்டன் நிறுவனம் அப்புனிதமான ஆன்மிக மரபுக்கு மரியாதை செலுத்துவது பெருமைக்குரிய விஷயம். நமது கலாச்சாரத்தைப் போற்றி வளர்க்க வேண்டும் என்பதுடன் இன்றைய இளைய தலைமுறை நமது பாரம்பரிய உடைகளை அணிந்து நமது முன்னோர்கள் வாழ்ந்து காட்டிய நெறிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்றார் என்று ராம்ராஜ் காட்டன் நிறுவனம் கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT