Published : 08 Jun 2025 06:01 PM
Last Updated : 08 Jun 2025 06:01 PM
ரங்கநகர்
ஶ்ரீரங்கம்
வேதா நேத்திக்கு ஜங்ஷன்லேந்து ஶ்ரீரங்கத்துக்கு வரச்சே பஸ் தேவி டாக்கீஸ் வாசல் வழியா வந்துது. எல்லாருமே பஸ் ஜன்னல் வழியா என்ன சினிமா ஒடறதுன்னு எட்டி பார்ப்பா. அதென்னமோ ஶ்ரீரங்கத்துல ஒரு வழக்கம் - ரங்கராஜா டாக்கீஸ்ல சிவாஜி கணேசன் படங்கள், தேவில எம்.ஜி.ஆர். படங்கள். ரங்கராஜால பக்தி படங்கள், தேவி டாக்கீஸ்ல குஸ்தி படங்கள். போறாததுக்கு தேவி டாக்கீஸ் வாசல்ல மல்யுத்தப் போட்டிக்கு விளம்பரங்கள் வெச்சிருப்பா.
இப்படிதான் நேத்திக்கு ஒரு போஸ்டர் ஒட்டியிருந்தா.
“அமெரிக்காவில் நடக்கும் மல்யுத்தம் பாணியில்:
கிங்காங் - தாராசிங்
போட்டா போட்டி
கட்டா குஸ்தி
காணத்தவராதீர்கள்”
-ன்னு விளம்பரம்.
***
மறுநாள்:
கார்த்தாலை ஏழு மணி.
ரங்காச்சாரியும், வேதாவோட மாமா LIC ஜகன்நாதனும் காப்பிக்காக காத்துண்டிருக்கச்சே வழக்கம் போல உலக விஷயங்களை அலசிண்டிருந்தா.
இன்னிக்கு topic:
Trump - Musk மல்யுத்தம்.
ஜகன்நாதன் மாமா “ரங்கா, திஸ் ஈஸ் ரிடிக்குலஸ். The Richestversus Most Powerful. I don’t know how this is going toget resolved.”
அப்போ வேதா காப்பி எடுத்துண்டு வந்து குடுத்தா.
“இன்னிக்கு உலகத்துல எந்தப் பிரச்னையை தீர்த்து வைக்கப் போறேள்”ன்னு பரிகாசமா கேட்டா.
ரங்காச்சாரி ஜகன்நாதன் மாமா பம்பாய்லேந்து வரச்சே கொண்டு வந்திருந்த Times of India பத்திரிகையை வேதாக்கு காட்டினார்.
வேதா கையில பத்திரிகையை வாங்கி படிச்சா. படிச்சுட்டு “இதென்ன நான் நேத்து பாத்த சண்டை விளம்பரம் மாதிரின்னா இருக்கு”ன்னு தனக்குள்ள சொல்லிண்டா.
வேதா படிச்சிண்டிருக்கச்சே மாமாவும், ரங்காச்சாரியும் ட்ரம்ப், மஸ்க் சச்சரவு பத்தி தொடர்ந்து பேசிண்டிருந்தா.
“One has enormous Wealth, the other has enormous Wrath, isn’t Ranga?!”ன்னு மாமா சொன்னார்.
“The dictionary meaning of wrath is great anger that expresses itself in a desire to punish someone. Trump truly possesses that, doesn’t he?”ன்னு ரங்கா பதிலுக்கு சொன்னார்.
“Yes, you saw that in that Oval Office meeting with Ukrainian leader and South African leader. My friend in Ministry of External Affairs in Delhisays that he heard other world leaders who had previously scheduled meeting with Trump are canceling out feigning COVID-like symptoms!”ன்னு மாமா.
ஜகன்நாதன் மாமாவும் ரங்காச்சாரியும் காப்பி சாப்பிட்டுண்டே... மஸ்க் தன்னோட Twitter-ங்கற X-ல தாறுமாறா எழுதினது, ட்ரம்ப் தன்னோட Truth Social-ல அதுக்கு பதிலா தாறுமாறா எழுதினது பத்தியெல்லாம் பேசிண்டிருந்தா.
இதைக் கேட்டுண்டுருந்த வேதா “நேத்து நான் பஸ்ஸுல தேவி டாக்கீஸ் பக்கமா அங்க அமெரிக்கால நடக்கற மாதிரி வடக்கத்திக்காரா இரண்டு பேர் குஸ்தி போடப்போறான்னு விளம்பரம். இது என்னடான்னா நிஜமாவே இரண்டு அமெரிக்காக்காரா குஸ்தி போலன்னா இருக்கு!”ன்னு சொன்னா.
அதுக்குள்ள மாமாவும், ரங்காச்சாரியும் ட்ரம்ப் ஏற்கெனவே மூணு கல்யாணம் பண்ணிண்டவன், மஸ்க் மூணோ நாலோ கல்யாணங்கள், இதைத் தவிர பல ஸ்த்ரீகளோட அவன் ஏகப்பட்ட குழந்தைகளைப் பெத்துண்டது, ட்ரம்ப்போட பையன்கள் குடும்ப வாழ்க்கை ஸ்திரம் இல்லாமை, ட்ரம்ப்போட பொண் வேற ஜாதி பையனுக்கு வாக்கப்பட்டிருக்கறது, ட்ரம்ப் குடும்பமே பண வெறியோட அலையறது பத்தி விலாவாரியா பேசிண்டிருந்தா.
மாமா “ஏற்கெனவே Tariff-ன்னால Stock market-ல havoc. இப்போ இவாளோட சண்டைனால அடிஷனல் டர்புலன்ஸ். It affects the market value of LIC’s investment portfolio. I don’t know when andhow the tariff and this feudends..”-ன்னு கவலையோட சொன்னார்.
வியந்து கேட்டுண்டுருந்த வேதா “மாமா, ஒங்களுக்கு நன்னாவே தெரியும் சித்தியம்மாவும் என் மாமியாரும் இரட்டைன்னு. சமயத்துல சித்திம்மா தான் தன்னோட அம்மா கிட்டேந்து கத்துண்ட சில சமயோஜிதமான ஐடியாக்களை சொல்லுவார். இந்தாத்து அக்கம் பக்கத்து மனுஷாளோட பல நாள் மத்தியானங்கள் ஜமாபந்தி நடக்கும். இதுதான் பேசலாம் இது பேசக்கூடாதுன்னு இருக்காது. சில சமயங்கள் மனுஷா சித்திம்மாவோட அபிப்ராயத்தை கேட்கரதுக்குன்னே வருவா. பல வருஷங்களுக்கு முன்னாடி இந்த சம்பவத்தை சொன்னார்”ன்னு ஆரம்பிச்சு...
வேதா தொடர்ந்தா.
“இது சித்திம்மா தன்னோட அம்மா சொன்னான்னு சொன்ன ஒரு பழைய காலத்து சம்பவம்.
சுதந்திரம் கிடைச்சப்பறம் மெட்ராஸ் chief minister-க்கும் கும்பகோணம் பெரிய ஜமீன்தார் ஒருத்தருக்கும் ஏதோ காலணா காசு பொறாத சமாஜாரத்துல பெரிய மனஸ்தாபமாம். ஜமீன்தார் ஒரு தினசரி பத்திரிகை வேற நடத்திண்டிருந்தாராம். அதுல தாறுமாரா chief minister பத்தி எழுதிடுவாராம். Chief minister கோபக்காரராம். வலுச்சண்டைக்காரராம். வந்த சண்டையையா விடப்போறார்?! அந்த காலத்துல கும்மோணம் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தது. CM தஞ்சாவூர் கலெக்டர் கிட்ட சொல்லி ஜமீன்தாராத்துக்கு நேர் எதிர இருந்த காலி மனைல ஒரு பெரிய குப்பை தொட்டியை கட்டி தொல்லை பண்ணியிருக்கார். ஒருத்தரை ஒருத்தர் ஸ்த்ரீலோபன்னு விரசமா பேசி, பத்ரிகைகள்ல போட்டு…”
காப்பி குடுக்க போனா வேதாவைக் காணோமேன்னு சித்தியம்மா அந்தப் பக்கம் வந்தா. வேதா பேசிண்டிருந்த சமாஜாரத்தோட சாரத்தைக் கேட்டுண்டு டக்குனு க்ரஹிச்சுண்டுட்டா. “என்னடா காப்பி குடுக்கப் போன வேதாவை காணோமேன்னு வந்தேன்”னு சொல்லிட்டு ஒரு நிமிஷம் அங்கே நின்னா.
வேதா ரத்ன சுருக்கமா ட்ரம்ப் - மஸ்க் சண்டையை பத்தி சித்தியம்மா கிட்ட சொல்லிட்டு “சித்திம்மா, ஒங்க அம்மா மத்யஸ்தம் பண்ணி வெச்சதைப் பத்தி சொல்லப போனேன். நீங்களே சொல்லுங்கோளேன்”னு சொன்னா.
சித்தியம்மா “வேதா, நீ சமாஜாரங்களை சொல்லர மாதிரி கோர்வையா சொல்ல எனக்கு தெரியாது. ஆனா சொல்லறேன்”னு தொடர்ந்தா.
“அந்த கும்மோணம் ஜமீன்தார் அம்மாக்கு ஒண்ணு விட்டுஅம்மாஞ்சி உறவு. முதல் மந்திரியோட பார்யாள் ஶ்ரீரங்கம். அம்மாக்கு அவாளை கொஞ்சம் பரிஸ்சயம். அம்மா கும்மோணம் ஜமீன்தார் கிட்ட “அம்மாஞ்சி, ஒங்கசண்டை, சச்சரவு விரசமா போயிண்டிருக்கு. கன்னா பின்னான்னு பத்ரிகைல வேற எழுதறளேன்னு சொல்லரா.
ஒங்க சண்டை இரண்டு பேருக்கும் பாதகம் இல்லாம நல்லபடியா முடியணும்”னு சொல்லிட்டு ஶ்ரீரங்கத்துக்கு முதல் அமைச்சரும் அவரோட பார்யாளோட திவ்யதம்பதிகளை சேவிக்க வந்தப்போ அவர் கிட்ட “ஒங்களுக்கு மகா பெரிய பதவினால அந்தஸ்து. என்னோட அம்மாஞ்சிக்கு மகா பெரிய சொத்துனால அந்தஸ்து.
ஒங்களுக்கோ நாலஞ்சு பொண்கள். ஒங்காத்து பொண் ஒருத்தியை அம்மாஞ்சியோட ஒரு பிள்ளைக்கு குடுத்து உறவை ஏற்படுத்தி இந்த பகைக்கு ஒரு முத்தாய்ப்பு வெய்ங்கோன்னு சொன்னா.அப்பறம் ஏதோ சந்தர்ப்பத்துல கும்மோணம் போனபோது ஜமீன்தார் கிட்ட தான் முதலமைச்சர் கிட்ட சொன்னதை சொன்னா. ஜமீன்தார் எங்கம்மா கிட்ட “அத்தங்கா, நீங்க சொல்லறது எப்படி இருக்குன்னா அந்த காலங்கள்ள ராஜாக்கள் அடுத்த ஊர் ராஜாவோட சண்டை வராம இருக்க இந்த மாதிரி சம்மந்தங்கள் பண்ணிப்பா”ன்னு சொன்னார்.
அந்த காலத்துல ஹைதராபாத் Nizam Osman Ali Khan அந்த காலத்து Ottomandynastyயோட தன்னோட relationship-ஐ strengthen பண்ணிக்கறதுக்காக தன் பிள்ளை ஒருத்தனை Ottoman princess-க்கு கல்யாணம் பண்ணி வெச்சான். ஒங்க ஐடியா அது மாதிரி இருக்கே! First class!”ன்னு சொன்னார். அதே மாதிரி சம்மந்தம் பண்ணிண்டா. ஒரு வழியா சமரசம் ஆச்சு”ன்னு முடிச்சா.
“வேதா, கொத்தவரங்கா பருப்பரைச்ச கறமேது பண்ண திறுத்தி தளிகைப் பண்ணி வெச்சிருக்கேன்னு சொல்ல வந்தேன். நானும் பேச்சுல இறங்கிட்டேன். தளிகைக் காரியங்கள் நின்னு போச்சு”ன்னு சொன்னார்.
வேதா “சாரி சித்திம்மா இவாளோட உலகப் பிரச்னைகள் பேச்சுல நானும் தளிகை காரியங்களை கோட்டை விட்டுட்டேன்”னு சொல்லிண்டே பரபரன்னு தலைப்பை இழுத்து இடுப்புல சொரிகிண்டு அவசர அவசரமா உள்ளே போனா.
சித்தியம்மாவும், வேதாவும் போனதும் ஜகன்நாதன் மாமா “அடேங்கப்பா, சித்திம்மாவோட விவேகம் எங்கேந்து வரதுன்னு இப்போ புரியறது!”ன்னு சொன்னார்.
ரங்காச்சாரி “மஸ்க் மூணோ நாலோ கல்யாணம் பண்ணிண்டிருக்கான். பொண்டாட்டிகள் மூலமாவும் இதர ஸ்த்ரீகள் மூலமாவும் வஜவஜன்னு பன்னண்டோ பதினாலோ குழந்தைகள். ட்ரம்ப் ஆத்துலயோ கல்யாணம், விவாகரத்துங்கறது சகஜமா தண்ணி பட்ட பாடா இருக்கு. ட்ரம்ப்புக்கே மூணு கல்யாணம். ட்ரம்ப்போட ஒரு பிள்ளைக்கு கல்யாணம் ஆகி, குழந்தைகளை பெத்துண்டு, அப்பறம் டைவர்ஸ் பண்ணிட்டு, இப்போ வேற யாரோடையோ இருக்கான். ட்ரம்ப்போட ‘இவாங்கா’ங்கற பொண் வேற ஏதோ ஜாதி மனுஷனை கல்யாணம் இருக்கா. இவாங்கா குடும்பத்துல எல்லாரும் பணம் பண்ணனும்னு நாயா பேயா அலையராளேன்னு தெரிஞ்சுண்டு இப்போ இருக்கற வேற ஜாதி ஆத்துக்காரனை டைவர்ஸ் பண்ணிட்டு மஸ்க்கை பண்ணின்டான்னா இந்த பூசல் பொங்கற பால்ல ஜலம் தெளிச்சா மாதிரி அடங்கிடும்”ன்னு சொன்னார்.
கண் கொட்டாம பார்த்து கேட்டுண்டிருந்த LIC ஜகன்நாதன் மாமா “ரங்கா, திஸ் ஈஸ் அமேசிங்! நோயிங் சித்திம்மா, and from her knowing about her mother today, ஒனக்கு எங்கேந்து இந்த ஞானம் வரதுன்னு தெரியறது. வேதா வாஸ் ஆல்வேஸ் ப்ரில்லியன்ட். யூ டூ ஆர் made ஃபார் ஈச் அதர். A மேரேஜ் மேட் இன் ஹெவன்! I will ask my friend who is a cartoonist for Times of India to depict this idea as a witty proposal in his next cartoon”ன்னு சொல்லிட்டு “I have an early phone call with my chairman. Let me get going”ன்னு குளிக்கப் போனார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT