Published : 29 Sep 2025 06:32 AM
Last Updated : 29 Sep 2025 06:32 AM

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 29 செப்டம்பர் 2025

மேஷம்: பண வரவு கூடும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் கூடும். பிள்ளைகளுடன் நேரம் செலவழிப்பீர்கள். சுற்றுலா பயணம் திருப்தி தரும்.

ரிஷபம்: எடுத்த வேலையை முடிக்க அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். பயணத்தில் அதிக கவனம் தேவை. ஆன்மிக நாட்டம் கூடும்.

மிதுனம்: திருமணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உறவினர்களுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். பழுதான வாகனம் சரியாகும்.

கடகம்: வீண் குழப்பங்கள் விலகும். வீட்டில் நிம்மதி பிறக்கும். எதிர்பாராத பணவரவு இருக்கும். பழைய கடன் பிரச்சினையை தீர்க்க வழி பிறக்கும். சகோதர வகையில் சுபச் செலவு உண்டு. உடல்நலம் சீராகும்.

சிம்மம்: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வெளி வட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். தள்ளிப்போன காரியங்கள் உடனே முடியும். அலுவலகத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள்.

கன்னி: சோர்வு, களைப்பு நீங்கி, உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும். வங்கிக் கடன் உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள்.

துலாம்: தடைபட்ட காரியங்கள் நல்லபடியாக முடியும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.வெளியூர் பயணங்கள் சாதகமாகும்.

விருச்சிகம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும். வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். கோபம் குறையும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும்.

தனுசு: முன்கோபத்தை தவிர்த்து, உணர்ச்சி வசப்படாமல் இருப்பது அவசியம். அறிவுப்பூர்வமாக முடிவெடுங்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பழுதான வாகனத்தால் கையிருப்பு கரையும்.

மகரம்: சவாலான காரியங்களையும் சர்வ சாதாரணமாக முடிப்பீர்கள். செல்வம், செல்வாக்கு கூடும். போட்டிகள், விவாதங்களில் வெற்றி கிடைக்கும். விஐபிக்களால் ஆதாயம் உண்டு.

கும்பம்: நம்பிக்கை, தைரியம் கூடும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். சாதுர்யமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். எதிர்பாராத வகையில் பணம் வரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.

மீனம்: பால்ய நண்பர்கள், உறவினர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். பழைய கடனைப் பற்றி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x