Published : 04 Jun 2021 03:14 AM
Last Updated : 04 Jun 2021 03:14 AM
சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையின் படி, ஈரோடு மாவட்டத்தில் நேற்று 1671 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 1565 பேர் குணமடைந் துள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி 8 பேர் உயிரிழந்தனர். மாவட்ட அளவில் தற்போது 16 ஆயிரத்து 87 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலத்தில் 1,253 பேர் பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் நேற்று 1,253 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், சேலம் மாநகரில் 355 பேரும், நகராட்சிகளில் மேட்டூரில் 40, ஆத்தூரில் 17, நரசிங்கபுரத்தில் 10, வட்டார அளவில் சங்ககிரியில் 89, ஓமலூரில் 83, பெத்தநாயக்கன் பாளையத்தில் 80, வீரபாண்டியில் 57, எடப்பாடியில் 48, சேலத்தில் 46, அயோத்தியாப்பட்டணத்தில் 40, நங்கவள்ளியில் 39,கொளத்தூர், ஆத்தூரில் தலா 37, வாழப்பாடியில் 35, காடையாம்பட்டியில் 33, கெங்கவல்லியில் 32, தாரமங்கலம், மேச்சேரியில் தலா 31, கொங்கணாபுரத்தில் 28, பனமரத்துப்பட்டியில் 26, தலைவாசலில் 25, மகுடஞ் சாவடியில் 18, ஏற்காட்டில் 14 என மாவட்டம் முழுவதும் 1,253 பேர் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர்.மாவட்டத்தில் கரோனா தொற்று சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 798 ஆக உயர்ந்துள்ளது. தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருபவர்களில் நேற்று 687 பேர் குணமடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT