Published : 09 Nov 2020 03:12 AM
Last Updated : 09 Nov 2020 03:12 AM

நவம்பர் 26-ல் பொது வேலைநிறுத்தம் மதுரையில் சிஐடியூ ஆயத்த மாநாடு

மதுரை: மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோதச் சட்டங்களுக்கு எதிராக நவ.26 அன்று அகில இந்திய பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. அதை முன்னிட்டு சிஐடியூ சார்பில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு மதுரை வில்லாபுரத்தில் நடைபெற்றது. சிஐடியூ மாவட்டத் தலைவர் மா.கணேசன் தலைமை வகித்தார். இதில், மத்திய அரசு தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்து, பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவாக சட்டங்களைத் திருத்தம் செய்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இதற்கு எதிராகவும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நவ. 26-ல் நடைபெறும் அகில இந்தியப் பொது வேலை நிறுத்தத்தில் அனைத்

மாநாட்டில், சிஐடியூ செயலாளர் ஆர்.தெய்வராஜ், ஐஎன்டியுசி மாவட்ட செயலாளர் டி.ராஜசேகரன், ஏஐடியுசி பொதுச் செயலாளர் எம்.நந்தாசிங், தொமுச மாவட்ட செயலாளர் சி.கருணாநிதி, எச்எம்எஸ் பொதுச்செயலாளர் வி.பாதர் வெள்ளை, டியூசிசி செயலாளர் பி.மீன்பாண்டி, எஸ்டியூசி செயலாளர் எம். சிக்கந்தர், டிடிஎஸ்எப் செயலாளர் எஸ். முருகேசன், எம்எல்எப் மாநில இணை பொதுச்செயலாளர் எஸ்.மகபூப்ஜான் ஆகியோர் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x