Published : 23 May 2021 05:51 AM
Last Updated : 23 May 2021 05:51 AM
சேலம் மாவட்டத்தில் நேற்று 742 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் 275 பேரும், நகராட்சிப் பகுதிகளில் ஆத்தூரில் 14 , மேட்டூரில் 12, நரசிங்கபுரம் 6, வட்டார அளவில் ஓமலூரில் 60, சேலத்தில் 51, வீரபாண்டியில் 38, சங்ககிரியில் 35, ஆத்தூரில் 29, எடப்பாடியில் 27, வாழப்பாடியில் 23, அயோத்தியாப் பட் டணத்தில் 20, தாரமங்கலத்தில் 18, நங்கவள்ளியில் 14, மகுடஞ்சாவடியில் 13, தலைவாசலில் 12, மேச்சேரி, பெத்தநாயக்கன் பாளையத்தில் தலா 8, கொங்கணாபுரத்தில் 6 பேர் என மாவட்டம் முழுவதும் 742 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
ஈரோட்டில் 10 பேர் உயிரிழப்பு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1,758 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. 10 பேர் உயிரிழந்தனர். இதுபோல, நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 598 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 5 பேர் உயிரிழந்தனர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT