Published : 10 May 2021 06:24 AM
Last Updated : 10 May 2021 06:24 AM
ஈரோட்டில் 7.13 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண உதவித்தொகை வரும் 15-ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வரின் அறிவிப்பின்படி, ஈரோட்டில் உள்ள 7.13 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதி முதல் தவணைத்தொகை ரூ.2000 வீதம் வழங்கப்படவுள்ளது. இதற்காக இன்று முதல் (10-ம் தேதி) வரும் 12-ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை பணியாளர்கள் வீடுகளுக்குச் சென்று டோக்கன் விநியோகம் செய்யவுள்ளனர்.
எனவே, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் வரும் 15-ம் தேதி முதல் தலா ரூ.2000 வீதம் நிவாரணத் தொகை பெறுவதற்கான டோக்கன்களில், குறிப்பிட்ட நாளில், சமூக இடைவெளியினை பின்பற்றி முகக்கவசம் அணிந்து ரேஷன் கடைகளில் உதவித்தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT