Published : 06 May 2021 03:13 AM
Last Updated : 06 May 2021 03:13 AM
சேலம் மாவட்டத்தில் நேற்று 613 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டனர்.
அதிகபட்சமாக சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் 322 பேருக்கும், நகராட்சிகளில் ஆத்தூரில் 19 பேர், மேட்டூரில் 11, நரசிங்கபுரத்தில் 4,வட்டார அளவில் ஓமலூரில் அதிகபட்சமாக 50 பேர், பனமரத்துப்பட்டியில் 20, சங்ககிரியில் 19, வீரபாண்டியில் 16, சேலத்தில் 13, ஆத்தூரில் 15, அயோத்தியாப்பட்டணத்தில் 16, பெத்தநாயக்கன் பாளையத்தில் 16, உள்பட மாவட்டம் முழுவதும் 613 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப் பட்டுள்ளனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று கரோனா தொற்றால் 616 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வந்தவர்களில் 609 பேர்குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார். தற்போது மருத்துவமனை மற்றும் வீடுகளில் தங்கி 3437 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT