Published : 20 Apr 2021 03:15 AM
Last Updated : 20 Apr 2021 03:15 AM
பாளையங்கோட்டையில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் 5 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. மாவட்டத்தின் பிறபகுதிகளில் பகலில் மழை பெய்யவில்லை.
மாவட்டத்திலுள்ள அணைகளின் நீர்மட்டம் (அடைப்புக்குள் உச்சநீர்மட்டம்) பாபநாசம்- 105.35 அடி (143), சேர்வலாறு- 118.31 அடி(156), மணிமுத்தாறு- 92.30 அடி (118), வடக்குபச்சையாறு- 43.33 அடி (50), நம்பியாறு- 12.66 அடி (22.96), கொடுமுடியாறு- 5.50 அடி (52.50).
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக அடையாமடையில் 41 மிமீ மழை பெய்துள்ளது. பூதப்பாண்டியில் 8 மிமீ, பெருஞ்சாணியில் 9, புத்தன்அணையில் 8, தக்கலையில் 14,கோழிப்போர்விளையில் 6, முள்ளங்கினாவிளையில் 17 மிமீ மழை பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 209 கனஅடி தண்ணீர் வருகிறது. 72 கனஅடிதண்ணீர் வெளியேறி வருகிறது. பெருஞ்சாணி அணைக்கு 54 கனஅடி தண்ணீர் வரும் நிலையில், நீர்மட்டம் 52 அடியாக உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும்முக்கடல் அணையின் நீர்மட்டம் 4.7 அடியாக உள்ளது. அணையில் இருந்து 7.42 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. சிற்றாறு ஒன்று அணையின் நீர்மட்டம் 5.64 அடியாகவும், சிற்றாறு இரண்டு அணையின் நீர்மட்டம் 5.74 அடியாகவும் உள்ளது.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT