Published : 23 Apr 2021 03:15 AM
Last Updated : 23 Apr 2021 03:15 AM

புத்தக தின கண்காட்சி :

திருநெல்வேலி

திருநெல்வேலி நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் நிறுவன கி.ளை மேலாளர் ஆர். மகேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உலக புத்தக தினத்தையொட்டி திருநெல்வேலி எஸ்.என். ஹைரோடு நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் இன்று (23-ம் தேதி) முதல் வரும் 30-ம் தேதி வரை சிறப்பு புத்தக கண்காட்சி நடத்தப்படவுள்ளது. இக் கண்காட்சியில் 10 முதல் 50 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும். கரோனா தொற்று காரணமாக புத்தக கண்காட்சிக்கு வருவோர் சமூக இடைவெளியை கடைபிடித்து, முககவசம் அணிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x