Published : 30 Nov 2020 03:11 AM
Last Updated : 30 Nov 2020 03:11 AM

மதுரையில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி உதவி

மதுரை: மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் பணிபுரிந்த காவலர் பழனிவேல்நாதன் அக்.3-ம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். காவல்துறையின் உதவும் கரங்கள் குழுவினர் இறந்த காவலரின் குடும்பத்துக்கு உதவும் வகையில் 2003-ல் அவருடன் பணியில் சேர்ந்த நண்பர்கள் மாநில அளவில் 24 லட்சத்து 92 ஆயிரத்து 500 ரூபாய் நிதி திரட்டி அவரது குடும்பத்தினருக்கு வழங்கினர்.

இதில் அவரது மகன் தீரஜ் (12), மகள் நிதி (8) பெயர்களில் எல்.ஐ.சியில் தலா ரூ.10 லட்சம் முதலீடு செய்யப்பட்டது. எஞ்சிய தொகையில் மனைவி ராதா பெயரில் கனரா வங்கி சேமிப்புக் கணக்கில் ரூ.2,87,479-ம் மற்றும் பழனிவேல்நாதனின் தாயார் நாகேஸ்வரி, தந்தை கணேசன் ஆகிய இருவரிடமும் ரொக்கமாக தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.

இதுதவிர, ராதா மற்றும் 2 குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.3 லட்சத்துக்கு சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் மூன்று ஆண்டுக்கான தனியார் இன்சூரன்ஸ் மருத்துவக் காப்பீட்டுப் பத்திரமும் காவல்துறை உதவும் கரங்கள் குழு மற்றும் மதுரை மாநகர் உதவும் கரங்கள் நண்பர்கள் சார்பில் நேரில் வழங்கப்பட்டது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x